தமிழக செய்திகள்

மறைமலைநகர் அருகே அசாம் மாநில வாலிபருக்கு வெட்டு

மறைமலைநகர் அருகே அசாம் மாநில வாலிபருக்கு கத்தியால் வெட்டு விழுந்தது.

தினத்தந்தி

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் லால்சாய் (வயது 23), இவர் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பணி முடிந்து இரவு வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் லால்சாய்யை திடீரென வழிமறித்து கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த லால்சாய்யை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசாம் மாநிலத்தை சேர்ந்த லால்சாயை முன் விரோதம் காரணமாக மர்ம நபர்கள் கத்தியால் வெட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு