தமிழக செய்திகள்

முன்விரோதத்தில் வாலிபருக்கு வெட்டு

தஞ்சை அருகே கோவில் விழாவில் முன்விரோதத்தில் வாலிபரை வெட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தஞ்சை அருகே மறியல் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் அஜித் குமார் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள முனியாண்டவர் கோவிலில் நடந்த அன்னதான நிகழ்ச்சியின் போது மீண்டும் அஜித்குமாருக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டுக்கு சென்று பெரிய கத்தியை எடுத்து வந்து அஜித்குமாரை வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த அஜித்குமார் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அஜித்குமார் அளித்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்