தமிழக செய்திகள்

பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்காக குவிந்த கறவை மாடுகள்

பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்காக கறவை மாடுகள் குவிந்தன.

தினத்தந்தி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சியில் நேற்று வாரச்சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பசுகள், கறவை மாடுகள், இளம்கன்றுகள், உயர்ரக கறவை மாடுகள், சினை மாடுகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வந்தன.

கறவை மாடுகள் மற்றும் சினை மாடுகளை வாங்க திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, சித்தூர், பலமநேர் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் கறவை மாடுகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை விற்பனையானது. 1500-க்கும் மேற்பட்ட காளைமாடுகள், சினை மாடுகள், கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் விவசாயிகள் பயிரிடப்படும் காய் மற்றும் கனிகள் இரவு 9 மணி வரை சந்தையில் விற்பனை செய்யப்பட்டன .இதனால் நேற்று நடந்த சந்தையில் சுமார் ரூ.2 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை