தமிழக செய்திகள்

வானில் திரண்ட கருமேகங்கள்

வானில் கருமேகங்கள் திரண்டன.

அரியலூரில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. இதனால் பலத்த மழை பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதனை பொய்யாக்கும் விதத்தில், மழை பெய்யவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம்அடைந்தனர். இருப்பினும் அரியலூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மழை பெய்தது.

SCROLL FOR NEXT