தமிழக செய்திகள்

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினத்தந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினமான ஆகஸ்ட் 20-ந் தேதி மதநல்லிணக்க தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்