தமிழக செய்திகள்

ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

பெண்ணாடம் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.

பெண்ணாடம்:

பெண்ணாடம் அருகே அரியராவி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்வளர்த்து விற்பனை செய்ய அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 33) என்பவர் குத்தகைக்கு எடுத்தார். தொடர்ந்து அவர் ஏரியில் மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் ஏரியில் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட மீன்கள் திடீரென செத்து மிதந்தன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மீன்கள் செத்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீன்கள் செத்ததற்கு காரணம் என்ன? என்பதை பற்றி அறிய ஏரி நீர் மற்றும் செத்த மீன்களை சேகரித்து சோதனைக்காக புதுச்சேரிக்கு அனுப்ப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு