தமிழக செய்திகள்

மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலியாகின.

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர்கள் ஆண்டி (வயது 50). இவர் 15ஆடுகள் வளர்த்து வந்தார். கருப்புசாமி (35) என்பவர் 19 ஆடுகள் வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை திடீரென்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை அந்த பகுதியில் பெய்தது. அப்போது கூவா கரடு அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் மீது மின்னல் தாக்கியது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. தகவலறிந்த நீரேத்தான் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், குலசேகரன் கோட்டை கிராம நிர்வாக அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாடிப்பட்டி கால்நடை மருத்துவர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆடுகளை உடல்கூராய்வு செய்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...