கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள ஓட்டக்கோவில்பட்டி குறிஞ்சிநகரை சேர்ந்தவர் கருப்பன் (வயது 35). தொழிலாளி. வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மழை காரணமாக வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து கருப்பன் மீது விழுந்ததில் படுகாயம் அடைந்தார். மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.