தமிழக செய்திகள்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

போடி வினோபாஜி காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், மீனாட்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் முருகனிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் பேசினர். மேலும் பாட்டில்களால் அவரது முகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்த மணி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு