தமிழக செய்திகள்

ஆவடி தொழிற்சாலையில் இருந்து ரூ.7,523 கோடிக்கு பீரங்கி டாங்கிகள் வாங்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

ஆவடி தொழிற்சாலையில் இருந்து 7,523 கோடி ரூபாயில் 118 பீரங்கி டாங்கிகளை தயாரித்து வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையை அடுத்த ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் இருந்து இந்திய ராணுவத்திற்கு தேவையான ராணுவ டாங்கிகள், துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆவடியில் இயங்கி வரும் ராணுவ டாங்கி தயாரிப்பு ஆலையில் இருந்து 7 ஆயிரத்து 523 கோடி ரூபாயில் 118 அர்ஜூன் எம்.கே.-1 ஏ ரக ராணுவ டாங்கிகளை தயாரித்து வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆர்டர் செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் இந்த கொள்முதல் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை