தமிழக செய்திகள்

ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடிப்பு

ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடிப்பு

தினத்தந்தி

ஒரத்தநாடு அருகே ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவிலை கோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

கோர்ட்டு உத்தரவு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள சில்லத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கல்லணை கால்வாய் வெட்டிக்காடு கிளையின் பராமரிப்பில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் நிலப்பரப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த கிராமத்தை சேர்ந்தவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த கோர்ட்டு சில்லத்தூர் பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புக்களை அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக சில்லத்தூர் பெரிய ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்த சுமார் 56 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் ஏரிக்கரையில் இருந்த 4 வீடுகள் போன்றவற்றை அகற்றினர். மேலும் ஏரிக்கரையில் கட்டப்பட்டிருந்த இடும்பன் கோவிலை இடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கோவில் இடித்து தரை மட்டம்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சில்லத்தூர் பெரிய ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இடும்பன் கோவிலை பொக்லின் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு