தமிழக செய்திகள்

அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

சேலம் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் வைரமணி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஞானசவுந்தரி, மாவட்ட துணைத்தலைவர் பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறை தொடங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி அதற்கான கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும். நிலம் இல்லாத விவசாய கூலி தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்