தமிழக செய்திகள்

காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

நாகர்கோவில்:

காவிரி நீரை தமிழகத்திற்கு மத்திய அரசு பெற்று தர வேண்டும். நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனிடிக் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மண்டல செயலாளர் பெல்வின் ஜோ முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் விஜயராகவன், சீலன், கிம்லர், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

--

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை