தமிழக செய்திகள்

பள்ளி சீருடை தைப்பதற்கான கூலியை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

பள்ளி சீருடை தைப்பதற்கான கூலியை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச சீருடை தைப்பதற்கான கூலியை ஆண்டுதோறும் 5 விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா தொடக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், சங்கத்தின் மாவட்டப் பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை தைப்பதற்கான கூலியை ஆண்டுதோறும் 5 விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும். பள்ளிச் சீருடைகளை பஸ்சில் எடுத்துச் செல்லும்போது லக்கேஜ் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். சீருடை தைக்கும் பெண்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தையல் கூட்டுறவு பெண் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி 60 வயது நிறைவில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரியப் பயன்களைத் தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாநில செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை