தமிழக செய்திகள்

9-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்கோபியில் ஆதரவு கேட்ட தொழிற்சங்கத்தினர்

9-ந் தேதி சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு கோபியில் தொழிற்சங்கத்தினர் ஆதரவு கேட்டனா.

தினத்தந்தி

கடத்தூர்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கல்வி, மருத்துவம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் தற்காலிக தொழிலாளர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 9-ந் தேதி சென்னை எழும்பூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியும் கோபி பஸ் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் துண்டு பிரசுரம் வினியோகம் செய்து ஆதரவு திரட்டினர். இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் சங்க துணை அமைப்பாளரும், தொ.மு.ச. நகர தலைவருமான முனுசாமி தலைமை தாங்கினார். கோபி பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பயணிகள் ஆகியோரிடம் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டு ஆதரவு கேட்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு