தமிழக செய்திகள்

வனப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராயம் கொட்டி அழிப்பு

தலைவாசல் அருகே வனப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராயம் கொட்டி அழிக்கப்பட்டது.

தலைவாசல்:-

தலைவாசல் அருகே வனப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராயம் கொட்டி அழிக்கப்பட்டது.

சாராயம் கொட்டி அழிப்பு

தலைவாசல் அருகே கரிய கோவிலை அடுத்த மண்ணூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் ஏட்டுகள் முனிராஜ், செல்வம், சீனிவாசன், சதீஷ்குமார் ஆகியோர் வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 9 பேரல்களில் சாராய ஊறல்கள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை அழித்து எரித்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றி கொட்டி அழித்தனர்.

வழக்குப்பதிவு

போலீசாரை கண்டதும், சாராய ஊறல் போட்டவர்கள் அங்கிருந்து தப்பிஓடி விட்டனர். இதையடுத்து சாராயம் காய்ச்சியவர்கள் மீது ஆத்தூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT