தமிழக செய்திகள்

கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பற்றி சென்னை உயர்நீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது, பரிசோதனைகளை போதுமான அளவில் நடத்தப்படவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்.

கொரோனாவால் இறந்தவர் உடல்களை தடுப்பு விதிகளை முறையாப் பின்பற்றி அகற்ற வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் தகனம் செய்ய வேண்டும்.

இதைத்தொடர்ந்து, குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பது பற்றிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றலாம் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தனர். மேலும், கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மையான விவரங்களை வெளியிட வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்