தமிழக செய்திகள்

பழனி கோவிலுக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே செல்ல பக்தர்களுக்கு அனுமதி

பழனி மலைக்கோவிலில் உச்சிகால பூஜை நடைபெற்ற பிறகு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினத்தந்தி

திண்டுக்கல்,

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை அடிவாரம் கிரிவீதியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகா சூரன், சூரபத்மன் உள்ளிட்ட சூரன்களின் உருவங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழனி மலைக்கோவிலில் உச்சிகால பூஜை நடைபெற்ற பிறகு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை