தமிழக செய்திகள்

ராமேஸ்வரம் கோவிலில் வார விடுமுறையை முன்னிட்டு அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

வார விடுமுறையையொட்டி ராமேஸ்வரம் கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமேஸ்வரம் கோவிலில் இன்றைய தினம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முன்னோர்களுக்கு பூஜை செய்த சுற்றுலா பயணிகள், ராமநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதே போல் தனுஷ்கோடி, ராமர் பாதம், கலாம் நினைவகம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் கொரோனா விதிகளை பின்பற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க சீருடை அணியாத காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து