தமிழக செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி மற்றும் 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் இன்றி ஆடிப்பூர நிறைவு விழா நடந்தது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் கோவிலில் மீண்டும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் 16-ந் தேதி மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை