தமிழக செய்திகள்

போலீஸ் நிலைய பெயர் பலகையில் தனியார் பெயர்கள் இடம்பெறகூடாது டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு

போலீஸ் நிலைய பெயர் பலகையில் தனியார் பெயர்கள் இடம்பெறகூடாது டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு.

தினத்தந்தி

சென்னை,

டி.ஜி.பி.சைலேந்திரபாபு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

சில போலீஸ் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். எனவே விளம்பரத்துடன் கூடிய போலீஸ் நிலைய பெயர் பலகைகளை அகற்றி, போலீஸ் நிலைய பெயர் மட்டுமே உள்ள புதிய பெயர் பலகையை அமைத்திட அறிவுறுத்தப்படுகிறது. போலீஸ் நிலைய முன்பணத்தை இதற்காக செலவிடலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு