தமிழக செய்திகள்

தர்மபுரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி

தர்மபுரி நகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட ஏ.கொல்லஅள்ளி சாலை வேடியப்பன் திட்டு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள், கடைகள், சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் சாக்கடை கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கிருபாகரன் தலைமையில் நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், கவுன்சிலர் தனலட்சுமி சுரேஷ் மற்றும் போலீசார் மேற்பார்வையில் வேடியப்பன் திட்டு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுபால் சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து