தமிழக செய்திகள்

வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி

தினத்தந்தி

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலியானார்.

காவலாளி

வெண்ணந்தூர் அருகே சப்பையாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65). தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல ராசிபுரம்- ஆட்டையாம்பட்டி சாலையில் மின்னக்கல் பிரிவு பகுதியில் நடந்து வந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக செல்லப்பன் மீது மோதியது.

வாலிபர் கைது

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 வாகன மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்லப்பன் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வெண்ணந்தூர் போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த ஆட்டையாம்பட்டி ராஜபாளையம் கருப்பனார் கோவில் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் ஹரிஹரன் (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை