தமிழக செய்திகள்

பேரிகை அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் மேலும் ஒருவர் சாவு

சூளகிரி:

சூளகிரி அருகே சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (45) என்பவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பேரிகை சென்றார். அதேபோல் பாகலூர் முனீஸ்வர் நகரை சேர்ந்த சதீஷ் (25), பேரிகை அருகே குடிசாதனப்பள்ளியை சேர்ந்த தேஜஸ் (26) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பேரிகை வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதில் நாகராஜ் மற்றும் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேஜஸ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேஜசும் இறந்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...