தமிழக செய்திகள்

திண்டுக்கல்: ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த தொழிலாளி கைது...!

திண்டுக்கல் அருகே ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பாடியூரை சேர்ந்த தொழிலாளி சிதம்பரம் (வயது 40).

இவர் தனது செல்போனில் வலைதளங்கள் மூலம் ஆபாசமான படங்களை பதிவிறக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிதம்பரத்தின் நடவடிக்கையை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்து உள்ளனர். அப்போது அவர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது உறுதியானதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வடமதுரை மகளிர் காவல் நிலைய போலீசார் சிதம்பரத்தை கைது செய்தனர்.