தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் இன்று தொடங்கின

தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா இரண்டாவது அலை காரணமாக மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பாடம் நடத்தப்பட்டது. தொற்று குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர். சுமார் 60 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கின.

மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் கடைபிடிப்பதை கல்லூரிகள் தீவிரமாக கவனிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை