தமிழக செய்திகள்

தஞ்சையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பட்டுக்குடி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் நேரில் பார்வையிட்டார். பின்னர் 'மக்களை தேடி மருத்துவம்' முகாமை ஆய்வு செய்த பிறகு, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா என்று பரிசோதனை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாமக்கல் தொடங்கி ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களை பார்வையிட்டு வருவதாகவும், இந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்க தேவையான மருந்து இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.  

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை