தமிழக செய்திகள்

வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சங்கராபுரத்தில் வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தினத்தந்தி

சங்கராபுரம், 

சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் வசித்து வரும் சிலர் பல ஆண்டுகளாக பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதையடுத்து வரியை கட்டக்கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் வரியை கட்டவில்லை. இதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் உத்தரவின் பேரில் நேற்று 10 வீடுகளுக்கு சென்ற குடிநீர் இணைப்பை பேரூராட்சி ஊழியர்கள் துண்டித்தனர். கடந்த சில நாட்களாக நடந்த இந்த பணியால் மொத்தம் 150 வீடுகளுக்கு சென்ற குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செயல் அலுவலர் சம்பத்குமார் கூறுகையில், பேரூராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து