தமிழக செய்திகள்

புளியந்துறை ஊராட்சிமன்ற செயலாளர் பணியிடை நீக்கம் - கலெக்டர் உத்தரவு...!

புளியந்துறை ஊராட்சிமன்ற செயலாளரை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உத்தரவிட்டு உள்ளார்.

தினத்தந்தி

கொள்ளிடம்,

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த புளியந்துறை, காட்டூர், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் இன்று மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு கான்கிரீட் வீடுகள், வாய்க்கால்களில் கதவணை கட்டும் பணி உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது புளியந்துறை ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு சென்ற கலெக்டர் லலிதா அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து புளியந்துறை ஊராட்சிமன்ற செயலாளராக பணியாற்றி வரும் சண்முகம்(வயது 47) என்பவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து