தமிழக செய்திகள்

மின் கணக்கீட்டுக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மின் கணக்கீட்டுக்கு எதிரான சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின் கணக்கீடு எடுக்காத நிலையில் ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு எடுக்கப்பட்டு மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மின் கணக்கீடு முறையில் எந்த விதி மீறலும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் அனைத்து தரப்பினருக்கும் மின் கட்டணம் பல மடங்காக அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி எம்.எல்.ரவி மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. முடிவில், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்