தமிழக செய்திகள்

கோவில் விழாவில் தகராறு; 9 பேர் மீது வழக்கு

கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது

தினத்தந்தி

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள சந்திவீரன் கோவிலில் எருது கட்டு விழாவை முன்னிட்டு கொடிவலைதல் விழா நடைபெற்றது. இத்திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையிலான போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலரை எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் இது தொடர்பாக மல்லாக்கோட்டை முத்துகிருஷ்ணன், அமலநாதன், ஜெயபாலன், சத்தியமூர்த்தி, பாலசுந்தரம், அருணாச்சலம் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை