தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் கருணாநிதி வரவேற்றார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில் ஊரக சாலை மேம்பாடு குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான மாவட்ட ஊராட்சி குழுவின் நிர்வாக அனுமதி பெறப்பட்டது.

மேலும் சிறப்பு தீர்மானமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக அயராது உழைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரை பாராட்டியும், நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்