தமிழக செய்திகள்

டிச.31: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

தமிழ்நாட்டில் மேலும் 1,155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,155 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 48 ஆயிரத்து 45 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 603 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 3 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:-

அரியலூர் - 0

செங்கல்பட்டு - 137

சென்னை - 589

கோவை - 70

கடலூர் - 1

தர்மபுரி - 8

திண்டுக்கல் - 1

ஈரோடு - 22

கள்ளக்குறிச்சி - 4

காஞ்சிபுரம் - 34

கன்னியாகுமரி - 9

கரூர் - 4

கிருஷ்ணகிரி - 3

மதுரை - 9

மயிலாடுதுறை - 0

நாகை - 1

நாமக்கல் - 18

நீலகிரி - 2

பெரம்பலூர் - 3

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 5

ராணிப்பேட்டை - 14

சேலம் - 25

சிவகங்கை - 4

தென்காசி - 1

தஞ்சாவூர் - 8

தேனி - 1

திருப்பத்தூர் - 2

திருவள்ளூர் - 43

திருவண்ணாமலை - 2

திருவாரூர் - 3

தூத்துக்குடி - 30

திருநெல்வேலி - 9

திருப்பூர் - 43

திருச்சி - 8

வேலூர் - 14

விழுப்புரம் - 3

விருதுநகர் - 14

சர்வதேச விமான நிலைய கண்காணிப்பு - 10

மொத்தம் - 1,155