தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை: சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்...!

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கெண்டாட்டம் களை கட்டியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று வழக்கத்தைவிட மெரினாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த எண்ணிக்கை மெரினான கடற்கரையின் மணல் பரப்பை மறைக்கும் அளவிற்கு காணப்பட்டது. அப்போது கடலில் இறங்கியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்