காரைக்குடி
சென்னையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தின் முடிவின்படி கழகத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும் ஒன்றிய, நகர, பேருர் கழக செயல்வீரர்கள் கூட்டம் சிவகங்கை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது..ஒன்றிய, நகர, பேருர் கழக செயலாளர்கள் இக்கூட்டத்தினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்தந்த ஒன்றிய நகர பேருர் கழக செயலாளர்கள் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கேஆர்..பெரிய கருப்பன் தெரிவித்து உள்ளார்.