தமிழக செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க.வினர் புகார்

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு கொண்டு வந்து உள்ள கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை குறித்து நடிகையும், பா.ஜனதா நிர்வாகியுமான குஷ்பு சர்ச்சை கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருடைய உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைபடுத்தும் வகையில் பேசிய பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து