சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 28 தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. அதன்படி, திமுக ஒதுக்கிய 23 தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், எஞ்சிய 5 தொகுதிகள் தொடர்பாக திமுக ஒதுக்கிய தொகுதிகளுக்கு மாற்றாக வேறு தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருகிறது.
இதனால் திமுக - காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் போன்ற தொகுதியை காங்கிரஸ் கேட்பதாகவும் , அதற்கு திமுக மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் எவை என்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
1) பொன்னேரி (தனி)
2) திருப்பெரும்புதூர் (தனி)
3) சோளிங்கர்
4) உதகமண்டலம்
5) ஈரோடு கிழக்கு
6) அறந்தாங்கி
7) கடலூர்
8) மயிலாடுதுறை
9) காரைக்குடி
10) சிவகாசி
11) திருவாடானை
13) நாங்குநேரி
14) குளச்சல்
15) விளவங்கோடு
16) கிள்ளியூர்
17) வேளச்சேரி
18) ஊத்தங்கரை (தனி)
19) துறையூர் (தனி)
20) ஆத்தூர் (தனி)
21) சிங்காநல்லூர்
22) கிருஷ்ணகிரி
23) அம்பாசமுத்திரம்
ஆகிய தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 5 தொகுதிகள் எவை என்பதில் இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கிரசுடனான தொகுதி ஒதுக்கீடு இறுதியான உடன் திமுக வேட்பாளர்கள் (164) பட்டியலுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்திற்கு செல்லவிருந்ததாக தகவல் வெளியானது.
ஆனால், காங்கிரசுடனான தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்டதால் கருணாநிதி நினைவிடத்திற்கு செல்லும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.