தமிழக செய்திகள்

தமிழகப் பெண்கள் குறித்து திமுக ஆதரவாளர் பொன்ராஜ் பேச்சு - அதிமுக கண்டனம்

தங்களை ஆட்சி செய்தவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை பெண்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள் என அதிமுக தெரிவித்துள்ளது.

சென்னை,

அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;-

தமிழகப் பெண்களை “விபசாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என பேசியுள்ளார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ்.

திமுக-வினரின் காலங்காலமாக உள்ள பெண்கள் குறித்த கேவலமான, அருவருப்பான பார்வையை மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தி உள்ளார் பொன்ராஜ்.

பெண்களுக்கு எதனால் 5 ஆண்டு திமுக ஆட்சியில் பாதுகாப்பு பாதாளத்திற்கு சென்றது என்பதற்கு இப்படிப்பட்ட ஆபாச பேச்சுகளே பதில்.

பெருமதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாமின் உதவியாளர் என தன்னை அடையாளப்படுத்தும் இந்த நபரின் பேச்சுகள், கண்ணியத்தின் உறைவிடமாம் ஐயா கலாமின் புகழுக்கே இழுக்கை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது.

கடந்த 5 ஆண்டுகளாக தங்களை ஆட்சி செய்தவர்கள் எப்படிபட்ட நபர்கள் என்பதை தமிழகப் பெண்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.வி. சேகர், பொன்ராஜில் துவங்கி இணையத்தில் போலி பெயருடன் திரியும் பல ஆபாசவாதிகளின் முகத்திரைகள் விரைவில் கிழித்தெறியப்படும்.

மகளிர் வாழ வேண்டும் என்றால், திமுக வீழவேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.