தமிழக செய்திகள்

நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பாதிப்பு

நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பாதிக்கப்பட்டார்.

தினத்தந்தி

சாயல்குடி, 

சாயல்குடி பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் கம்பெனியில் வட மாநில தொழிலாளி ஒருவர் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சாயல்குடி பகுதியில் இரவில் நடந்து சென்றபோது தெருநாய் அவரை கடித்து குதறியுள்ளது. ஆனால் அவர் முறையான சிகிச்சைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நாளடைவில் அவரது செயலில் மாற்றம் கண்ட அப்பகுதியினர் அவரை தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்த வடமாநில தொழிலாளி நாய் செய்யும் செயல்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்