தமிழக செய்திகள்

எஸ்.புதூர் பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை

எஸ்.புதூர் பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது.

தினத்தந்தி

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது. இதுகுறித்து கழுதைப்பால் விற்பனையாளரான விருத்தாச்சலத்தை சேர்ந்த மாமுண்டி கூறும்போது, நாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக கழுதைப்பால் விற்று வருகிறோம்., ஒரு பகுதிக்கு ஆண்டு ஒரு முறை வருவோம். கழுதைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம். இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது செரிமான பிரச்சினை, வாந்தி, மந்த தன்மை நீங்கும் எனவும், பெரியவர்கள் குடித்தால் மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குணமாகும். 20 மில்லி கொண்ட கழுதைப்பால் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம் என்றார். பொதுமக்களும் கழுதைப்பாலை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது