தமிழக செய்திகள்

ராணிப்பேட்டை: திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்

சோளிங்கர் அருகே திரௌபதி அம்மன் அர்ஜுனன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவ விழா கோலாகலமாக நடைபெற்றது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் சில நாட்களுக்கு முன் வெகு விமரிசையாக தொடங்கியது.

இந்நிலையில் இன்று திரௌபதி அம்மன் அர்ஜுனன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கோவிலில் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரௌபதி அம்மன் அர்ஜுனன் சாமி மண்கோலத்தில் எழுந்தருளி காட்சி தந்தார்.பின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரண்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு