தமிழக செய்திகள்

வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உத்தரவு...!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

சென்னை, 

தமிழக மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வரும் போது சரியான ஆடை கட்டுப்பாட்டுடன் வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கறிஞர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணியக் கூடாது. நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து