தமிழக செய்திகள்

தூத்துக்குடி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தூத்துக்குடி அருகே குழாய் உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

தினத்தந்தி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் எம்.சவேரியார் புரம் அருகே உள்ள கீதாநகர் விலக்கு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் ஒரு இடத்தில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயில் உடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து