தமிழக செய்திகள்

பெரம்பலூரில் மேலும் 4 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து

பெரம்பலூரில் மேலும் 4 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெரம்பலூர் நகராட்சிக்கு காவிரி குடிநீர் வழங்கும் காவிரி கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக திருச்சி நெம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 29-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை குடிநீர் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடையாததால் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 6-ந்தேதி வரை 4 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனை பெரம்பலூர் நகர பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளுமாறு பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்