தமிழக செய்திகள்

மீன் பிடிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி சாவு

மீன் பிடிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

தேவகோட்டை, 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே செங்கற்கோவில் சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (62) இவர் நாகாடி புதுக்கண்மாயில் மீன்பிடிக்க சென்ற போது மீன்பிடி வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது, இந்த சம்பவம் குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SCROLL FOR NEXT