தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

கென்யாவில் இருந்து வந்த பெண்ணிடம் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நைஜீரியா நாட்டில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தோகாவில் இருந்து சென்னை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கென்யாவில் இருந்து வந்த இளம்பெண், கால்களில் அணிந்திருந்த ஷூக்களில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணிடம் இருந்து 2.2 கிலோ கொக்கென் என்ற போதைப்பொருளை கைப்பற்றினர்.

மேலும் அப்பெண்ணை கைது செய்த அதிகாரிகள், சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக போதைப்பொருளை எடுத்து வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை