தமிழக செய்திகள்

மார்த்தாண்டம் அருகே மதுபோதையில் பஸ் மீது கல் வீசியவர் கைது

மார்த்தாண்டம் அருகே மதுபோதையில் பஸ் மீது கல் வீசியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் பாலாசிங் (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சிரகோடு வழியாக குளச்சல் செல்லும் அரசு பஸ்சில் மதுபோதையில் ஏறியுள்ளார். பின்னர் சாங்கை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் திடீரென்று கீழே கிடந்த கல்லை எடுத்து அந்த பஸ் மீது வீசியுள்ளார். அதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்