தமிழக செய்திகள்

வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கை பயிரிட்டுள்ளனர். பின்னர் விளைந்ததும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். அங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்ற நிலையில், தற்போது அது ரூ.13 ஆயிரத்திற்கும், சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு விற்ற நிலையில், தற்போது ரூ.13 ஆயிரத்து 1500-க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்