தமிழக செய்திகள்

கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்; அதிகாரி தகவல்

கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது.

தினத்தந்தி

விழுப்புரம் மாவட்டத்தில் கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. அதன்படி கண்டமங்கலம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செஞ்சி கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும், திண்டிவனம் கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் 25-ந் தேதி (புதன்கிழமை) அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள், பொதுமக்கள் நேரில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்துவரும் வேலை நாளன்று (அலுவலக நாளில்) குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை