தமிழக செய்திகள்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா: திங்கட்கிழமை தொடங்குகிறது

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா திங்கட்கிழமை தொடங்குகிறது

தினத்தந்தி

ஏரல்:

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாசலசாமி கோவில் வளாகத்தில் வலம் வருதல் நடைபெறுகிறது. 8-ந் தேதி இரவு 8 மணிக்கு திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் கோவில் வலம் வருதல், 9-ந் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவ மூர்த்தி அலங்காரம், 10-ந் தேதி இரவு 8 மணிக்கு பூங்குயில் சப்பரத்தில் நடராஜ அலங்காரம், 11-ந் தேதி இரவு 8 மணிக்கு திருப்புன்னைச் சப்பரத்தில் நவநீதகிருஷ்ண அலங்காரத்தில் சுவாமி வலம் வருவார். வருகிற 12-ந் தேதி இரவு 7 மணிக்கு பொம்மலாட்டம், இரவு 8.30 மணிக்கு ஏக சிம்மாசன சப்பரத்தில் பால சேர்மன் அலங்காரம், 13-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பல்லாக்கில் தவழ்ந்த கிருஷ்ண திருக்கோலம், இரவு 9 மணிக்கு நாதஸ்வரம், சிறப்பு தவில், 14-ந் தேதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், இரவு 8 மணிக்கு வில்வச் சப்பரத்தில் ராஜாங்க அலங்காரம், 15-ந் தேதி இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8.30 மணிக்கு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி திருக்கோலத்தில் ஏரல் நகர் வீதிவலம் வருதல் நடைபெறுகிறது. ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி தருதலும், அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 11 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருதல் நடைபெறுகிறது. வருகிற 17-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி திருக்கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருளை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல்12.30 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு